districts

img

கல்குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப்.20- திருச்செங்கோடு அருகே பொது மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற் படுத்தி வரும் கல்குவாரிகளை நிரந்த ரமாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு போராட்ட ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே உள்ள கோக்கலை,  எளையாம்பாளையம், நெய்க்காரம் பாளையம் மற்றும் அதனை சுற்றி ஐந்து கல்குவாரிகள் இயங்கி வந்தன. இந்த கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது, சாலைகள் சேதம், அதிகத்திறன் கொண்ட வெடிகள் வைப்பதால் வீடு கள் சேதம், விவசாய பயிர்கள் சேதம்,  கால்நடைகள் உயிரிழப்பு ஆகிய வற்றால் அப்பகுதி பொதுமக்கள் பல் வேறு சிரமங்களை சந்தித்து வந்த னர். கடந்தாண்டு மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில், ஐந்து கல்குவாரி களை தடை செய்ய வேண்டும் என்று  விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து மனு அளித்த னர். அதன்பின் குவாரிகளுக்கு புதிய தாக ஏதும் அனுமதி வழங்கக்கூடாது  என எதிர்ப்பு இருந்தும், தற்போது  தனி நபர் ஒருவருக்கு புதிய கல்கு வாரி அமைக்க கனிமவளத்துறை அனுமதி வழங்கி இருப்பதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இப்பகுதியில் கல்குவாரிகள் அமைக்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், பொதுமக் கள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப் புக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பழனிவேல் தலைமை  வகித்தார். இதில் கல்குவாரி  எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பா ளர் முகிலன், தமிழ் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் செந்தமிழன், மார் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்  கவுன்சிலர் சுரேஷ், ஒன்றியச் செயலா ளர் தேவராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பழனியம்மாள், ஊராட்சி  மன்ற துணைத்தலைவர் பூசன் உட் பட பலர் கலந்து கொண்டனர். இதன் பின் மாவட்ட ஆட்சியர் ச.உமாவிடம்  கோரிக்கை மனு அளித்தனர்.