districts

img

வங்கித்தேர்வில் தமிழை புறக்கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தாராபுரம், மே 24- வங்கித்தேர்வில் தமிழை புறக்கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தாராபுரத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு நடத்தும் வங்கி பணிக்கான தேர்வுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படுகிறது. இதைக்கண்டித்தும், வங்கிப்பணி தேர்வு களை தமிழில் நடத்த வலியுறுத்தியும் திராவிடர் கழக இளை ஞரணி சார்பில் அறிஞர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல இளை ஞர் அணி செயலாளர் ஆ.முனீஸ்வரன் தலைமை வகித்தார். இதில், திராவிடர் கழக மாவட்ட தலைவர் க.கிருஷ்ணன், செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் அணி தலைவர் நா.சக்தி வேல், மாவட்ட இளைஞரணி தலைவர் கி.இளந்தென்றல், செயலாளர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.