districts

img

மதவெறிக்கு துணைபோவதா?

தருமபுரி, பிப்.5-  மதவெறிக்கு துணைபோகும் கோவை மாநகர காவல்துறையை கண்டித்து கோவை, திருப்பூர் மற்றும் தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 ஆம் தேதியன்று  கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர்  ஜி. இராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை யில் மதவெறி எதிர்ப்பு  உறுதிமொழி ஏற்கப் பட்டது. அப்போது, காவல்துறை அதிகாரி கள்  காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே- வின் பெயரை சொல்லக் கூடாது என்று  தடை விதித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். காவல்துறையினரின் இந்த அராஜகத்தை கண்டித்தும், குவாலிய ரில் ‘கோட்சே – ஆப்தே பாரத ரத்னா’ என்ற பெயரில் விருது வழங்கப் படுவதை கண்டித்தும் சனியன்று திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மு.பரம சிவம் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன், மாவட்ட செயலாளர்கள் த.மு.யாழ் திலீபன், தி.மு.க. சார்பில் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் இரா.தாமரைச்செல்வன், கழக நிர்வாகி முனி.ஆறுமுகம், மதிமுக மாவட்டச் செயலாளர் அ.தங்கராசு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் மாரிமுத்து, திராவிடர் கழக நிர்வாகிகள் க.கதிர், அ.தமிழ்ச்செல்வன், புலவர். இரா.வேட்ராயன், வீ.சிவாஜி, இரா.கிருஷ்ணமூர்த்தி  உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்

கோவை

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.  இதில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார், திராவி டர் கழகம் மாவட்ட செயலாளர் திக.செந்தில்  நாதன், மாநகர தலைவர் புலியகுளம் வீர மணி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில்,  ஏராளமானோர் பங்கேற்று கோவை மாநகர காவல் துறையினரை கண்டித்து முழக்கங் களை எழுப்பினர்.

திருப்பூர்

 திருப்பூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட் டத் தலைவர் இரா ஆறுமுகம் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்ட செயலா ளர் யாழ் ஆறுச்சாமி, திருப்பூர் மாநகர திராவிடர் கழக தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திரா விடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இல.அங்க குமார், சன்.முத்துக்குமார் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக அகிலன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ரமேசுபாபு, கார்த்திகேயன், அறிவர சன், மகேஷ், குமார், காட்டாறு இதழ் குழு சார்பாக செந்தில்குமார், மணிகண்டன், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.