நாமக்கல், ஜூலை 10- ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எரு மப்பட்டியில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். இந்த ஒன்றியத்தில் தொழிற்சாலை அமைத்து இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். நாமக்கல்லிலிருந்து தூசு ஏரிக்கு வரும் கழிவுநீரை முறைப்படி சுத்திகரிப்பு செய்ய வேண்டும். பழனி நகரில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். எருமைப்பட்டியிலிருந்து சேந்தமங்கலம், தொட்டியம், வலை யபட்டி ஆகிய ஊர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எருமப்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு எருமப்பட்டி வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் வீ.பிரபு தலைமை வகித்தார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.சிவசந்திரன், ஒன்றிய செயலாளர் பி.கதிர்வேல், ஒன்றிய பொருளாளர் பி.பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.