districts

img

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.12- கிராம நிர்வாக அலுவலரை இடை நீக்கம் செய்த வருவாய் கோட்டாட்சி யரை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர் வாக அலுவலர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், முருங்கப்பட்டி பகுதியில் கிராம நிர்வாக (பொ) அலு வலராக செயல்பட்டு வந்தவர் கண்ணன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு முருங் கப்பட்டியில் அரசு சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு கூட்ட நெரிசலின் காரணமாக மேடை சரிந்து விழுந்துள் ளது. இதற்கு கிராம நிர்வாக (பொ) அலு வலர் கண்ணன் தான் காரணம் என குற் றஞ்சாட்டி, அவரை வருவாய் கோட்டாட் சியர் பணியிடை நீக்கம் செய்தார். இதனை கண்டித்து தமிழ்நாடு கிராம  நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பு சார் பில் சூரமங்கலம் பகுதியிலுள்ள வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்  பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித் தார். இதில் மாநிலத் துணைத்தலைவர் நல்லாகவுண்டர், மாவட்டச் செயலாளர் ரமேஷ், வட்டத் தலைவர் கலையரசன் உட்பட திரளான கிராம நிர்வாக அலு வலர்கள் பங்கேற்றனர்.