சேலம், ஜன.3- பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஓமலூரில் சிஐடியு பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைத்தறி துணி உற்பத்தியின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். ரக ஒதுக்கீடு சட்டத்தை உறுதியாக அமல்ப டுத்த வேண்டும். கைத்தறி நெசவு தொழிலா ளர்களுக்கு வருடாந்திர போனஸ் வழங்க வேண்டும். வீட்டுமனையுடன் கூடிய வீடு கட் டும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற் பத்தி செய்வதையும், விற்பனை செய்வதை யும் தடுத்து நிறுத்த வேண்டும். நலவாரியத் தில் பதிவுபெற்ற கைத்தறி தொழிலாளர்க ளுக்கு கல்வி நிதி, திருமண நிதி, ஓய்வூதி யம் உள்ளிட்ட சலுகைகளை காலதாமத மின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு சேலம் மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்தி னர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமை வகித் தார். இதில் சிஐடியு சாலை போக்குவரத்து சம்மேளன துணைத்தலைவர் எஸ்.கே.தியா கராஜன், சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் பி.பன்னீர்செல்வம், கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சண்மு கத்ம, மாவட்ட நிர்வாகிகள் ரவிக்குமார், ராம நாதன், முருகன், இலக்கியவதியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.