districts

img

ஊழியர் விரோதமாக செயல்படும் நேர்முக உதவியாளர் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 7- ஊழியர் விரோத போக்குடன் செயல் படும் நேர்முக உதவியாளரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி சேலத்தல் ஊரக  வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷம். இவர், ஊரக வளர்ச்சித் துறை  அலுவலர்கள் மீது அதிகார துஷ்பிர யோகம் செய்து வருகிறார். பல ஊழியர் களை பழிவாங்கும் நோக்கத்தோடு பணியிட  மாற்றம் செய்துள்ளார். சர்வாதிகாரத் தனமாக செயல்படு இவரை பணியிட மாற்றம்  செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட மாவட்டம் முழுவதிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலு வலர் சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.ஜே. கண்ணன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல்  சேலம் ஒன்றியம் காடையாம்பட்டி உள்ளிட்ட  மாவட்டத்தில் பல்வேறு வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.