districts

img

தள்ளுவண்டி வழங்க வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.25 - மதுரை, ஈரோடு மாநகராட்சிகளில் வழங்கியதைப் போல  சாலையோர வியாபாரிகளுக்கு திருப்பூர் மாநகராட்சி நிர்வா கம் தள்ளுவண்டி வழங்க கோரி சிஐடியு சாலையோர வியா பாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 20 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வரும்  சாலையோர வியாபாரிகளுக்கு முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும், சாலை யோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடன் அலைக்கழிக் காமல் வங்கிகளில் வழங்க வேண்டும், மதுரை ஈரோடு மாநக ராட்சிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகமே, தள்ளு வண்டி வழங்கியுள்ளது. அதுபோல் இங் கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் வெள்ளி யன்று சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சாலையோர வியாபாரி கள் சங்கச் செயலாளர் பி.பாலன் தலைமை வகித்தார். சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். சாலையோர வியாபாரிகள் சங்கத் தலை வர் பி.முருகேசன், சங்கப் பொருளாளர் கே.ராமர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.