districts

img

பாரா மெடிக்கல் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஏப்.17- மருத்துவ கழிவுகளை குறைந்த கட்டணத்தில் மாந கராட்சியே அகற்ற வேண் டும் என்பதை வலியுறுத்தி பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், இச்சங்கத்தின் தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார். சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் முன் னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திர ளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர். இதுகுறித்து மருத்துவர் ரவீந்திரநாத் கூறுகையில், கோவை, பொள் ளாச்சி, திருப்பூர், உடுமலைப்பேட்டையில் ஏராளமான சிறிய ஆய்வகங்கள் செயல் பட்டு வருகின்றன. இங்கு உள்ள மருத்துவ கழிவுகளை ஏஜெண்டுகள் மூலம் தனியார் நிறுவனத்தினர் அகற்றி வருகின்றனர். மாதம் இதற்கு கட்டணமாக ரூ. 2,000 முதல் 2800 வரை வசூலிக்கின்றனர். எனவே இக்கட் டணத்தை 750 ரூபாயாக குறைப்பதுடன், மாந கராட்சி நிர்வாகமே தினமும் மருத்துவ கழிவு களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.