districts

img

நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 23- தமிழ்நாடு நில அளவை அலுவலர் கள் ஒன்றிப்பு சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி புதனன்று வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்து, பணியை முறைபடுத்த வேண் டும். நில அளவையர் முதல் கூடுதல் இயக்கு நர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உட னடியாக நிரப்ப வேண்டும். நிலுவை மனுக் களை காரணம் காட்டி மேற்கொள்ளும் மாவட்ட மாறுதல்களையும், ஒழுங்கு நடவ டிக்கையும் கைவிட வேண்டும். ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் உயர்  அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 72 மணி நேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் புதனன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட மையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரா.கல்பனா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கி.வெங்க டேசன், மாவட்ட பொருளாளர் மா.முரு கன், மாவட்ட துணைத்தலைவர் பொ.குமர வேல், மாவட்ட இணைச் செயலாளர் தவ மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.புக ழேந்தி, மாவட்ட நிர்வாகிகள் பி.எஸ்.இள வேனில், சி.காவேரி, குமரன் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாநிலச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட தலை வர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் வெங் கடாசலம், மாவட்ட பொருளாளர் சங்கர் உள்ளிட்ட நில அளவை அலுவலர்கள் நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.