சேலம், நவ.30- அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில், கருவிகள் இருந்தும் பயிற்றுநர்கள் இல்லாததால் மாண வர்கள் அவதிப்படுவதாகக் கூறி தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலைய அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருவிகள் இருந்தும் மாணவர்க ளுக்கு கற்றுத்தர ஆள் பற்றாக் குறை உள்ளது. அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தற்காலிகமாக பணி யில் அமர்த்தப்பட்டு, கடந்த 5 முதல் 12 ஆண்டுகளாக குறைவான ஊதி யத்தில் பணியாற்றி வருபவர் களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, சேலம் கோரிமேடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் கிளைச் செயலாளர் ஸ்ரீபதி தலைமை வகித்தார். மோட்டார் வாகன பராமரிப்பு துறை மாநில துணைத்தலைவர் முருகப்பெரு மாள் மற்றும் கணேசன் உள்ளிட் டோர் பங்கேற்று உரையாற்றினர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு அரசி னர் தொழிற்பயிற்சி நிலையத் தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் ரா.சுமதி தலைமை வகித் தார். கிளைச் செயலாளர் செ.சிவசுப்பிரமணியன் வரவேற் றார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்க ளைப் பற்றி மாநிலத்தலைவர் மு.சீனிவாசன் விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன், எஸ்.வேணுகோபால், இ.கணேசன் உள்ளிட்டோர் வாழ்த் துரை வழங்கினர். இறுதியாக கண்ணன் நன்றி கூறினார். கோவை இதேபோன்று, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத் தினர் கோவை மற்றும் ஆனைகட்டி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலை யங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, கிளைத் தலைவர் மோகன் தலைமை ஏற்றார். இதில், நிர்வாகிகள், கோவிந்தராஜ், பஞ்ச லிங்கம் ஆகியோர் உரையாற்றி னர். ஆனைகட்டியில் கிளைச் செய லாளர் கார்த்திகேயன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் நடராஜன் மற்றும் கிருஷ்ணகுமார், சிவசக்தி உள்ளிட்டோர் உரையாற்றினர்.