தருமபுரி, மார்ச் 7- பணி ஆணை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளநிலை ஆய்வாளரிலிருந்து முது நிலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப் பட்டவர்களுக்கு, பணிபுரியும் மணடலத்தி லேயே பணி அமர்வு ஆணை வழங்க வேண் டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கூட் டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தரு மபுரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் பி.சி.குமார் தலைமை வகித் தார். மாநிலத் தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்டச் செயலாளர் பாக்கியவதி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.சேகர், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, வேளாண் மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் ஆர்.ஜெயவேல், சி.காவேரி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.