தருமபுரி, ஆக.19- பணிமாறுதலின் போது விதிமுறையை பின்பற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங் கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோட்டக்கலைத் துறையில் அமைச்சுப் பணியாளர்களின் மாறுதல் மற்றும் நியம னங்களில் விதிமுறைகளின்படி சீரான நடை முறையை பின்பற்ற வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரேகா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஜெயவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சி.காவேரி, ஜாக் டோ-ஜியோ மாவட்ட நிதி காப்பாளர் கே.புக ழேந்தி, அரசு ஊழியர் சங்க வட்டச் செய லாளர் குமரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பழனியம்மாள் வாழ்த்தி பேசினார். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் அண்ணாதுரை நன்றி கூறி னார்.