districts

img

சீமான் மற்றும் கமல்ஹாசனை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.5- நூறுநாள் வேலை திட்டத்தை முடக்க வேண்டும் என கூறிய சீமான், கமல்ஹாசனை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் கமலஹாசன் ஆகியோர் நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று கூறியுள்ள னர். இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனங் களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சீமான் மற்றும் கமல்ஹாசன் பேசியதைக்  வன்மையாக கண்டத்தும், 100  நாள் வேலையை பாதுகாக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாகவும், ரூ600 தினக்கூலி வழங்க வேண்டும் என வலிறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தில், ஓமலூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் ஜி.கணபதி, மாவட்ட நிர்வாகி எம்.சின்ராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர் கள் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், காந்தி காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் லெனின் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலா ளர் செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் நா.வெங்க டேஷ், சிபிஎம் கிளைச் செயலாளர் துரைசாமி, மாதர்  சங்க நிர்வாகி மலர்செல்வி உட்பட நூறு நாள் வேலை  திட்ட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.