districts

img

நகராட்சி ஆணையர் தாக்கப்பட்டதைக் கண்டித்து புன்செய் புளியம்பட்டியில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப்.21- புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் ஆணையரைத் தாக்கியவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று மாலை புளியம்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மக்களுக்கும், அரசிற்கும் இடையில் அர சாங்கத்தின் தூதுவர்களாக அரசு ஊழியர் கள் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் மக்களின் பிரதிநிதிகளுக்கு விதிகளின்படி திட்டங்களை வகுக்க நிர்வாக அலுவலர் கள் செயல்பட்டு வருகிறார்கள். விதிகளுக் குப் புறம்பாக கவுன்சில் முடிவு எடுக்கும் போது நிர்வாக அலுவலர்கள் அதனை சுட்டிக் காட்டுகிறார்கள். இது சில நேரங்களில் மக் கள் பிரதிநிதிகளுக்கு ஏற்புடையதாக இல்லா ததால் ஆத்திரமடைகின்றனர். மக்கள் பிரதி நிதிகளின் தேர்ச்சியின்மையால் நல்ல நிர் வாகத்தை வழங்க முடியாத நிலை அலுவ லர்களுக்கு ஏற்படுகிறது. இதனால், அரசு ஊழியர்களுக்கும், மக்கள் பிரநிதிகளுக்கும் பல நேரங்களில் தகறாறில் முடிவடைகிறது. இதன்ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி கவுன்சில் கூட்டம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது.

 இதில் நகர் மன்ற தலைவர் ஜனார்த்தனன்,  துணை தலைவர் பி.ஏ.சிதம்பரம், ஆணையர் அ.சையது உசைன் மற்றும் கவுன்சில் உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது நகர மன்ற தலைவரும், துணை தலைவரும் ஆணையரை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகளைப் பேசி தாக்கியுள்ளனர். இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  ஆணையாளரை தாக்கி அவமதித்த சம் பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, வெள்ளி யன்று அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உடனடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்ய  வேண்டும். அத்துடன் ஆணையருக்கு பணி புரியும் இடத்தில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநி லத் தலைவர் கா.முருகானந்தம் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர் ஆர்.குமரவேல் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க  மாவட்ட தலைவர் ஏ.ராக்கிமுத்து ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செய லாளர் ச.விஜயமனோகரன், மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர். மாநில பொது  செயலாளர் மு.தாமோதரன் நிறைவுரையாற் றினார். முடிவில், ஈரோடு கிளை தலைவர் ஏ.ஈனூஸ் நன்றி கூறினார். இதில், திரளா னோர் பங்கேற்றனர்.