districts

img

குடிமனை பட்டா கேட்டு புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், ஆக. 30- கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்திற்குட் பட்ட பின்னலூர் கிராமத்தில் வசிக்கும் 75 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு  குடிமனை பட்டா கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் ஆக.30 அன்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மணி தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் நெடுஞ்சேரலாதன், ஜெயக்குமார் மற்றும் பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.