திருப்பூர், ஜூன் 20 - மேற்கு வங்கத்தில் மாதர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் சோமாதாஸ் மீது கொலைவெறித் தாக்குதல் நடத் திய திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்க ளைக் கண்டித்து பெருமாநல்லூரில் திங் களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட் சித் தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், 24 பர்காணா மாவட்டத்தில் உள் ளாட்சித் தேர்தல் மனுதாக்கல் செய்ய தயாரிப்பு வேலைகளில் இருந்தபோது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் மத்திய குழு உறுப்பினர் சோமா தாஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் குண் டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி யுள்ளனர். இந்த தாக்குதலைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் திங்க ளன்று பெருமாநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பானுமதி தலைமை ஏற் றார். தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.சரஸ்வதி, வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் கே. எஸ்.கற்பகம், மாவட்ட துணைச்செய லாளர்கள் பா.லட்சுமி, சி.பானுமதி, செல்வி மற்றும் மாவட்டக்குழு உறுப் பினர்கள் அம்சவேணி, மேரிலீலா, வசந்தி உட்பட மாதர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் ஆர்.கவிதா நன்றி கூறினார்.