ஈரோடு, ஜூலை 18- சேலத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மீது தாக் குதல் நடத்திய குண்டர்களை கைது செய்யக்கோரி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஆர்.விஜயராகவன், தாலுகாச் செயலாளர் ஆர்.முரு கேசன், தாலுக்காக் கமிட்டி உறுப்பினர்கள் ஏ.கே.பழனிச்சாமி, எஸ்.செபாஸ்டியன், அந்தியூர் பேரூராட்சி 3ஆவது வார்டு சிபிஎம் கவுன்சிலர் எஸ்.கீதா உள்ளிட்டோர் உரையாற்றினர். இதேபோன்று, காஞ்சிக்கோயிலில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தாலுகாச் செயலாளர் பி. முத்துபழனிசாமி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம், வாலிபர் சங்கம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், கட்சிகிளை செய லாளர் ராஜசேகரன், விதொச தாலுகாத் தலைவர் கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், பவானி - அந்தியூர் பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி தாலுகாச் செயலாளர் எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன், தாலுகா கமிட்டி உறுப்பினர் வி.தமிழ்ச்செல்வன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க பவானி தாலுக்காச் செயலாளர் பி.கந்த சாமி, பி.கோபாலகண்ணன், பி.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.