districts

img

சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கிகரிக்க வேண்டும்

ஈரோடு, அக்.21- பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் பாசிச இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்  கிற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி, இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியா கூட்டணியின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பவானி நகர  திமுக நகரச் செயலாளர் பா.சீ.நாக ராஜன் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம்நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச் சாமி, தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மூத்தவழக்க றிஞருமான ப.பா.மோகன், நகரச் செயலாளர் ப.மா.பாலமுருகன், முஸ்லீம் லீக் இம்தியாஸ், இந்திய தேசிய காங்கிரஸ் விஜயானந்தன், கொங்குநாடு மக்கள் கட்சி. குமார். ஏஐஎஸ்எப் தேசிய குழு உறுப்பினர் பா.சினேகா ஆகியோர் கண்டன உரை யாற்றினார். கூட்டணி கட்சிகளின் நிர் வாகிகள் மற்றும் திரளானோர் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர். நாமக்கல் இதேபோன்று, பாலஸ்தீன மக்க ளுக்கு ஆதரவாக சனியன்று நாமக்கல்  பூங்கா சாலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச்  செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் என். வேலுச்சாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.  திருப்பூர் இஸ்ரேல் நாட்டின் ராணுவ நடவ டிக்கையை கண்டித்தும், பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவு தெரிவித்தும், சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கிகரிக்க வலியுறுத்தியும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். மைதிலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் சம்பத், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளி யப்பன், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.