திருப்பூர், ஜன.7- வேலம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை வரையி லான நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு தற்போது வேலம்பட்டி அருகே சுங்கச்சாவடி திறந்து சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கான ஏற் பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப் படுகிறது. மொத்தம் 31 கிலோ மீட்டரில் 20 கிலோ மீட்டர் தூரம் திருப்பூர் மாநக ராட்சி எல்லைக்குள் செல்கிறது. கட்டண சாலை என்பதற்கான எந்தவித கட்டுமா னங்களும் செய்யாமல், ஏற்கனவே இருந்த சாலை மீது எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே சாலை அமைத்து நான்கு வழிச்சாலை என்கிற தோற்றத்தை மட்டுமே உருவாக்கி உள் ளனர் என்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், தற்போது அமைக்கப்பட் டுள்ள சுங்கச்சாவடி நீர்நிலையை ஆக்கி ரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், இப்ப குதியில் திட்டமிட்டு டோல்கேட் அமைத்து வசூலிக்க நடவடிக்கை மேற் கொண்டு வருவதை கண்டித்து போராட் டம் நடத்தப்படுவாதக தெரிவித்தனர். வடக்கு அவிநாசி பாளையம் கிராம மக் கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியி னர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.