districts

img

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு சுவர் ஜேசிபி மூலம் இடித்து அகற்றம்

திருப்பூர், அக். 7 - திருப்பூர் மாநகராட்சி ராயபுரம்  பிரதான சாலை மற்றும் சூசைபுரம்  இணைப்புச் சாலை பகுதியில் ஆக்கி ரமிப்பு சுவர் அகற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு  செய்து சனியன்று அங்கு தனியார்  ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டி ருந்த சுவரை அப்புறப்படுத்தினர் திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட 37ஆவது வார்டு ராயபுரம் மெயின் ரோடு மற்றும் சூசைபுரம் பகுதிகளை இணைக்கும் சாலை  ஆக்கிரமிக்கப்பட்டு சுவர் எழுப்பப் பட்டிருப்பதாக கடந்த சில தினங்க ளுக்கு முன்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு சுவர் கட்டப்பட்ட நி லையில், சூசைபுரம் பகுதியில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் மாற்றுப் பாதையில் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் தனி யார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண் டும் என அதில் வலியுறுத்தப்பட்டி ருந்தது. இதன் தொடர்ச்சியாக சனியன்று அப்பகுதியில் மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆவணங்களுடன் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய் வின் அடிப்படையில் தனியார் ஆக்கி ரமிப்பில் கட்டப்பட்ட சுவர் எழுப்பப் பட்ட இடம் மாநகராட்சிக்கு சொந்த மானது என உறுதி செய்யப்பட்டது. ஆவணங்களின் அடிப்படையில் உட னடியாக அங்கிருந்த ஆக்கிரமிப்பு களை அப்புறப்படுத்தி சுவரை ஜேசிபி வாகனம் மூலம் இடித்து அகற் றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது அங்கிருந்தோர் மாநகராட்சி  அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியரி டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் மேலதிகாரிகள் உத்தரவு அடிப்படையில் நடவடிக்கை எடுக் கப்படுவதாக அவர்கள் பதில்  அளித்தனர். காவல்துறையினர் பாதுகாப்பு டன் அந்த ஆக்கிரமிப்பு சுவர் அப்புறப் படுத்தப்பட்டது. பெஸ்ட் அவன்யூ  என்ற பெயரில் குடியிருப்பு  உருவாக் கப்பட்டு அதற்கான நுழைவு வாயில் அமைக்கப்பட்டு  இருப்பதை தாங் களே  அப்புறப்படுத்திக் கொள்வதாக  கொங்கு நாடு முன்னேற்றக்கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி தரப் பினர்  உறுதி அளித்திருப்பதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவித்தனர்.