districts

img

சிதிலமடைந்த வீடுகளை இடித்து புதிய வீடுகள்

ஈரோடு, டிச. 13- எழுமாத்தூர் கிராமம், அண்ணா நகரில்  சிதிலமடைந்த வீடுகளை இடித்து விட்டு  புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. விதொசவின் மொடக்குறிச்சி தாலுகா 3ஆவது கோரிக்கை மாநாடு எழுமாத்தூர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. தாலுகா  தலைவர் கே.கணேசன் தலைமை வகித்தார்.  மாநிலக்குழு உறுப்பினர் கே.அருட்செல்வன் சிறப்புரையாற்றினார். விவசாயிகள் சங்க தலைவர் கே.கண்ணுசாமி வாழ்த்தி பேசி னார்.  கிருஷ்ணாபுரம்-ஏணிப்பாளி மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். வீடற்ற தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். திரு மண உதவித் தொகை வழங்கும் திட்டத்தை  மீண்டும்  அமலாக்கவேண்டும். வண்ணாம் பாறை பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர்  புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். எழுமாத்தூர் கிராமம், அண்ணா  நகரில் சிதிலமடைந்த  வீடுகளை இடித்து  விட்டு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில், புதிய தாலுகா கமிட்டியின் தலைவராக கே.கணேசன், செயலாளராக டி. தங்கவேல், பொருளாளராக ஏ.பி.மாதவன் மற்றும் 13 பேர் கொண்ட கமிட்டி அமைக் கப்பட்டது.