districts

img

பசுமையான மரங்களை வெட்டுவதை நிறுத்த கோரிக்கை

உடுமலை, டிச.23- உடுமலை - மூணாறு சாலை விரிவாக்கம் செய்ய மக்களுக்கு பயன்தரும் பசு மையான மரங்களை வெட்டு வதை நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடு மலை - மூணாறு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது. அதற்காக போடிபட்டி ஊராட்சி, அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து குரல்குட்டை பிரிவு வரை சாலையின் இரு புறங்களிலும் இருக்கும் சுமார் 31 பழ மையான மரங்களை வெட்டபட்டு வருகிறது. இந்நிலை யில், போக்குவரத்து மிகுத்த இந்த சாலையில் எவ்வித எச்சரிக்கை தடுப்புகள் இல்லாமல் மரங்களை வெட்டுவ தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பசுமையாக வும், அடர் வனப்பகுதி போல் இருந்த உடுமலை சாலையில் இருக்கும் மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும். ஆனால், எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் மரம் வெட்டுவ தால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரு வதை தடுக்க வேண்டும், என்றனர்.