திருப்பூர், மார்ச் 7- ஓம் விநாயகா நகர் பகுதி யில் தேங்கி நிற்கும் கழிவு நீர் செல்லும் வகையில் முறை யாக கால்வாய் அமைக்க கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாதர் சங்க நகரக்குழு செயலாளர் கவிதா வியாழனன்று முதலாம் மண்டல உதவி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி 10 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஓம் விநாயகா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுக்கு வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சௌபாக்யா நகரிலிருந்து வரும் சாக்கடை கழிவு நீர் ஓம் விநாயகா நகர் மூன்றாவது வீதி யில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாக் கடை நீர் தேங்காமல் செல்லும் வகையில் சாக் கடை கால்வாயை முறையாக கட்டித் தர வேண்டும். இப்பகுதி ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கான வேலையை தொடங் கிய போது, உருவான குப்பைகள் அகற் றப்படாமல் உள்ளது. எனவே குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிட வேண் டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாதர் சங்க நகரத் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாந்தி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.