திருப்பூர், ஜன. 27- வருங்கால வைப்பு நிதி திட்ட (இபிஎஸ் 95) ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய் வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவதற்காக திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயனிடம் மனு கொடுக்கப் பட்டது. இபிஎஸ் 95 திருப்பூர் மாவட்ட ஓய்வூதியர் கள் சங்கத்தின் தலைவர் சி.ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் கோபால், பொருளாளர் தேவ ராஜ் உள்ளிட்டோர் வெள்ளியன்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனி டம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இபிஎஸ் 95 ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச மாத ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்க வேண்டும். உடனடியாக பகத்சிங் கோரியா குழு பரிந்துரைப்படி இடைக்கால ஓய்வூதிய மாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டமாக ஓய்வூதியர் களை இ எஸ் ஐ யில் இணைத்து மருத்துவ சிகிச்சை பெற வழி செய்ய வேண்டும், பறிக் கப்பட்ட ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். இக் கோரிக்கை களை இந்த நாடாளுமன்றத்தின் கடைசி பட் ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று தமிழக எம்பிக்கள் வலியுறுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தேர் தல் வாக்குறுதியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஓய்வூதியர்களின் அடிப்படை கோரிக் கைகளை வலியுறுத்தி ஜனவரி 29, 30 தேதி களில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் தமிழகப் பிரதிநிதிகள் பங் கேற்பது. தமிழகத்திலும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய் யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.