திருப்பூர், டிச.23- ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் உள்ள மின் அலுவலக்க ளில் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற் றது. திருப்பூர் வடக்கு மாநகரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு சார்பில் குமார் நகர், அப்பாச்சி நகர் மின் அலுவல கத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மனு அளிக்கப்பட்டது. இதில், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். மைதிலி, வடக்கு மாநகர குழு உறுப்பி னர்கள் எஸ்.ராஜேந்திரன், ஒய்.அன்பு, டி.ராமன்ந்த், பா.சௌந்தரராஜன், ஆர். நந்தகோபால், பி.மனோகரன், சம்பத், தமிழ்வாணன், வளர்மதி உட்பட கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் பலர் பங் கேற்றனர். அவிநாசி: சேவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதில், அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.வெங்டசாலம், ஆர்.பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.கருப் பசாமி, கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வடக்கு ஒன்றியம்: அதேபோல, ஸ்மார்ட் மீட்டர் திட் டத்தை கைவிடக் கோரி வெள்ளிக் கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றியம் பெருமாநல்லூர், வாவிபாளையம், பாண்டியன்நகர் ஆகிய பகுதி கிளைகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்பசாமி, அழகு, தன்ராஜ், ரேவந்த குமார், வசந்தி உட்பட கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.