தருமபுரி, ஜன.7- நாகவதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலை யில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நாகாவதி அணை கடந்த 5 வருடங்க ளுக்கு பிறகு தற்போது முழு கொள்ளளவை எட்டி வருகி றது. இந்த அணையின் மூலம் இரு வாய்க்கால்கள் வழியாக அரகாசனஹள்ளி, சின்னம்பள்ளி, பெரும்பாலை உள்ளிட்ட கிராமங்களிலுள்ள சுமார் 1993 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்கிடையே அணையின் பாசன வாய்க்கால்கள் 18 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கடந்த ஐந்து வருடங்களாக தண்ணீர் வராததால் வாய்க் கால்கள் தூர்வாரும் பணி கிடப்பில் போடப்பட்டது. எனவே, பாசத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண் டும். அதற்கு முன்பாக கால்வாய் உடைப்புகளை சரி செய்து தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.