districts

நிலுவைத்தொகை வழங்க தேயிலை விவசாயிகள் கோரிக்கை

உதகை, செப்.4- பந்தலூர் கூட்டுறவு தேயிலை தொழிற் சாலைக்கு பசுந்தேயிலை வழங்கி  வரும் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் இன்கோ கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை யில் 1800க்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்க ளாக இருந்து, பசுந்தேயிலை வழங்கி  வருகின்றனர். இவர்கள் வழங்கும் பசுந் தேயிலைக்கு மாதந்தோறும் 10 ஆம்  தேதிக்குள் இந்திய தேயிலை வாரியம் சார்பில் விலை நிர்ணயம் செய்யப்ட்டு, அந்த விலையை சம்மந்தப்பட்ட கூட்டு றவு தேயிலை தொழிற்சாலைகள் விவ சாயிகளுக்கு வழங்கி வருகிறது. பந்த லூர் இன்கோ கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில், கடந்த மூன்று மாதங் களாக விவசாயிகள் வழங்கிய பசுந் தேயிலைக்கு முன்பணம் மட்டுமே வழங் கப்பட்டு வந்தது, இந்நிலையில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் மீதமுள்ள நிலுவை தொகையை இது வரை தேயிலை விவசாயிகளுக்கு வழங் கப்படாமல் இருந்து வருகிறது. இத னால் கூட்டுறவு தேயிலை தொழிற் சாலைகளுக்கு தங்களுடைய பசுந்தே யிலையை வழங்காமல் தேயிலை விவ சாயிகள் தனியார் தேயிலை தொழிற் சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கி  வருகின்றனர். எனவே, பந்தலூர் அரசு  கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் உறுப்பினர்களாக இருந்து பசுந்தே யிலை வழங்கி வரும் சிறு, குறு தேயிலை விவசயிகளுக்கு தேயிலை வாரியம் நிர்ணயிக்கும் விலையை முறையாக மாதந்தோறும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.