கோவை, அக்.14- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி சேவையினை வழங்க வேண்டு மென தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநாடு தீர்மானம் நிறை வேற்றி உள்ளது. தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க 7 ஆவது மாவட்ட மாநாடு பிஎஸ் என்எல் அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம். பி. வடிவேல் தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.சண்முக சுந்தரம் வரவேற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலை வரும், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழி லாளர் சங்க உதவி பொது பொதுச் செயலாளரான ஏ.பாபு ராதா கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சி.பழனிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி சேவையினை வழங்க வேண் டும். ஈஎஸ்ஐ, பிஎப் போன்ற சமூக நலத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவ னத்தில் உள்ள காலிப்பணியி டங்களில் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு நிரந்தர வேலை தர வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டை பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். மகேஸ்வரன், மாநில உதவித் தலைவர் சி. சசிகுமரன் மற்றும் ஏஐபிடிபிஏ அகில இந்திய அமைப்புச் செயலாளர் வி. வெங் கட்ராமன் ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் பி.கல்யாணராமன் நிறைவுரை யாற்றினார். மாவட்டத் தலைவராக வி. பழனிச்சாமி, செயலாளராக ஏ.வி.அப்துல் முத்தலீப், பொருளாளராக பி.கல்யாணராமன் ஆகியோருடன் 15 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட உதவிப் பொருளாளர் என்.குமரேசன் கூறி னார்.