வீடு புகுந்து திருட்டு
கோவை, டிச.7- சரவணம்பட்டி அருகே குளிக்க சென்ற நேரத்தில், அடை யாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, சரவணம்பட்டி அருகே உள்ள திருவிக வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவர் அதேபகுதியில் உள்ள தனி யார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டிலி ருந்த அவர் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த அடை யாளம் தெரியாத நபர்கள், ராஜ்குமாரின் அறையிலிருந்த மடிக்கணினி, செல்போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதையடுத்து குளியல் அறையிலிருந்து வந்த ராஜ்குமார், அறையிலிருந்த பொருட்கள் திருட்டு போயி ருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா? என்று தேடிப்பார்த்த போது, அங்கு யாரும் இல்லை. இதுகுறித்து ராஜ்குமார் சரவணம்பட்டி காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு
கோவை. டிச, 7- ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன விலங்குகள் கணக் கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இதில் பல்லுயிர் சூழல், விலங்குகளின் உணவுச் சங்கிலி ஆகியன குறித்த தகவல்கள் திரட் டப்பட்டு வனத்துறையின் மூலம் தேசிய புலிகள் பாது காப்பு ஆணையத்திடம் ஒப்ப டைக்கப்பட உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 2 முறை கணக் கெடுப்பு நடைபெறும். இதன் தொடர்ச்சியாக பொள் ளாச்சி வன கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால் பாறை, உலாந்தி மானாம் பள்ளி, 4 வனச்சரகங்களில், காலை 7 மணிக்கு குழுவினர் தினமும் வனத்திற்குள் சென்று வன விலங்கு களின் கால் தடம், எச்சம், மரங்களில் காணப்படும் நகக் கீறல்கள், விலங்குகளை நேரில் பார்த்தல், ஒலியை கேட்டல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, ஜி.பி.ஆர்.எஸ் கருவியின் துணையுடன் அளவீடுகள், நேரம் ஆகியவை குறிக்கப் பட்டு கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) காலை நேர தொடர் வகுப்பு
அரசியல் சாசன விழுமியங்களும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும் 09.12.2022 வெள்ளிக்கிழமை காலை 6.30 - 7.30 மணி தலைப்பு: தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள் பங்கு கருத்துரை: கே.பாலகிருஷ்ணன்
ஏற்றுமதி கடனுக்கு வட்டி மானியத்தை அதிகரித்து வழங்க கோரிக்கை
திருப்பூர், டிச. 7- ஏற்றுமதி கடனுக்கான வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், பண கொள்கை தொடர்பான குழுவின் முடிவுப்படி ரிசர்வ் வங்கி வழங்கும் வ ர்த்தக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 35 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து, 6.25 சதவீதமாக உயர்த்தி அறிவித் துள்ளார். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலை வர் கே.எம்.சுப்பிரமணியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், வளர்ச் சியை தொடரவும் வேண்டும் என்ற நோக்கத்தில் ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகித உயர்வை அறிவித்துள்ளது. ஆனால் தற்போது உக்ரைன் யுத்தம் மற்றும் கொரோனா தொற்று ஆகிய இரு பெரும் காரணங்களால் உலகில் நிலவும் அசாதா ரணமான சூழ்நிலையில், திருப்பூர் ஏற்றுமதி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மற்ற போட்டி நாடுகள் எல் லாம் வட்டி விகிதத்தை குறைத்து வரும் சூழ்நிலையில் இந்தி யாவில் வட்டி விகிதம் அதிகரித்து இருப்பது ஏற்றுமதியில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஏற்றுமதி கடனுக்கு வங்கிகளின் வட்டி விகித மானியத்தை ஐந்து சதவிகிதமாக அதிகரித்து ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் ஏற்றுமதியாளர்களுக்கு ரூபாய் அடிப்படையில் கடன் வழங்க வங்கிகளை ஊக்கு விக்க வேண்டும். இதன் மூலம் தற்போதுள்ள சூழ்நிலையில் திருப்பூர் ஏற்றுமதி தொழில் போட்டியிடும் தன்மை அதிக ரிக்கும். இவ்வாறு கே.எம். சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
வீடு வாங்கித் தருவதாக தனது பெயரில் பண மோசடி காவல் துறையில் க.செல்வராஜ் எம்எல்ஏ புகார்
திருப்பூர், டிச. 7 - தனது பெயரை பயன்படுத்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி, ஒரு வர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக க.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற உறுப்பினரும், திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளருமான தனது பெயரை பயன்படுத்தி, 9788330581 என்ற தொலைபேசி எண் கொண்ட நபர் தவறான எண்ணத்தோடும், பணம் பறிக்கும் நோக்கத் தோடும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கி தருகிறேன் என்று மோசடியில் ஈடுபட்டு வருகின்றார். இது குறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில், இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபடும் நபரை கண்டறிந்து அவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் தெற்கு சரக உதவி காவல் ஆணையரிடம் செவ்வாயன்று புகார் அளித்துள்ளேன். மேலும், இவ்வாறு எனது பெயரை பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்தோடு மோசடி சம்பவங்களில் ஈடுபடும் நபர் கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பொதுமக்கள் இவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
திருப்பூரில் பழைய வேஸ்ட் குடோனில் தீ விபத்து
திருப்பூர், டிச. 7- திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கிலான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை, போயம்பாளையம் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருபவர் ஶ்ரீ ராம் (எ) ராமர். இவர் அதே பகுதியில் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட் களை சேமித்து வைக்க குடோன் ஒன்றை வைத்துள்ளார். இந் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏழு மணியளவில், குடோ னிலிருந்து புகை வந்துள்ளது. பின்பு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அருகிலிருந்த வர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத் தனர். தீ விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், குடோனை இரவு நேரம் பயன்படுத்தாத காரணத்தால் குடோ னில் மின் இணைப்பு இல்லை. கார்த்திகை தீபம் என்பதால் அருகிலுள்ள வீடுகளிலிருந்து விளக்கோ அல்லது பட்டாசோ விழுந்து தீப்பிடித்திருக்கலாம் எனவும், இந்த தீ விபத்தின் காரணமாக கோடிக்கணக்கிலான மதிப்புள்ள பொருட் கள் எரிந்துள்ளதாகவும் தகவல் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரளாவை போல் உரித்த தேங்காயை கொள்முதல் டிச.14ல் கோரிக்கை மாநாடு நடத்த முடிவு
திருப்பூர், டிச.7- கேரளாவை போல தமிழ்நாடு அரசு உழவர்களிடத்திலே நேரடியாக உரித்த தேங்காயை டன் ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யக்கோரி, கோவை மாவட் டம், செஞ்சேரிமலையில் டிச.14 ஆம் தேதி தென்னை உழ வர்கள் கோரிக்கை மாநாடு நடத்த இருப்பதாக தமிழக விவசா யிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக செய்தி யாளர் சந்திப்பு திருப்பூர் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங் கத்தின் நிறுவனர் ஈ.முருகசாமி கூறுகையில், ஒன்றிய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கொப்பரை கொள்மு தல் ஏக்கர் ஒன்றுக்கு 285 கிலோவிலிருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும். கேரளாவை போல தமிழ்நாடு அரசு உழ வர்களிடத்திலே நேரடியாக உரித்த தேங்காயை டன் ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும். பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனும திக்க வேண்டும் உள்ளிட்ட தென்னை உழவர்களின் பல் வேறு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் தீர்மானங்களாக நிறை வேற்றப்பட இருக்கிறது. இந்த மாநாட்டில் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவ சாய சங்க அமைப்பினர் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
பேருந்தில் திருட முயன்றவர் மீது தாக்குதல்
கோவை, டிச.7- கோவை – அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில், திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தாக் கினர். திருப்பூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த வர் உமா மகேந்திரன் (33). இவர் தனது நண்பருடன் கோவை வந்தார். இதன்பின் சின்னியம்பாளையம் பேருந்து நிறுத் தத்திலிருந்து கோல்டு வின்ஸ்-க்கு தனியார் பேருந்தில் புறப் பட்டார். அப்போது அருகிலிருந்த வாலிபர் ஒருவர், உமா மகேந்திரன் பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்துகொண்டு ஓட்டம் பிடித்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உமா மகேந்திரன் சத்தம் போட்டு, அவரது நண்பர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் திருட்டில் ஈடுபட்டவரை சரமாரியாக தாக்கி, பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து நடைபெற்ற போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் வேலூரை சேர்ந்த மாரியப்பன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப் பனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
உதகை, டிச.7- நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவரை உதகையில் போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள எட்டின் பகுதியில் உள்ள கியாஸ் கம்பெனியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கதவை உடைத்து ரூ.2.50 லட்சம் பணம் திருடப்பட்டது. இதேபோல் கேத்தி பகுதியில் வீட்டின் கதவை உடைத்து ரூ.2.50 லட்சம் பணம் திருடு போனது. இதையடுத்து நடைபெற்ற போலீஸ் விசாரணையில் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திங்களன்று இரவு நீலகிரியில் போலீசார் விடுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ராஜா தங்கும் விடுதியில் உதகை மத்திய காவல் நிலைய ஆய்வாளர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் சோதனை செய்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் தங்கி இருந்தார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கியாஸ் குடோன் மற்றும் கேத்தி பகுதியில் பணம் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 457 (வீடு புகுந்து திருடுதல்)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் அவரை உதகை ஜே.எம். நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி உதகை சிறையில் அடைத்தனர். முன்னதாக, அவர் இதுபோல் திருநெல்வேலி மாவட்டத்திலும் பல்வேறு திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அங்குள்ள பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 379 (திருட்டு), 307 (கொலை முயற்சி) உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கடந்த வாரம் நெல்லையில் திருடி விட்டு அந்த பணத்துடன் இங்கு வந்து தங்கி இருந்தது தெரியவந்தது.
“கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து” அர்ஜூன் சம்பத், தடா ரஹீம் மீது வழக்கு
கோவை, டிச.7- இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது, இரு பிரிவினர் இடையே கலவரத் தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை பதி விடுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி யின் தலைவர் அர்ஜூன் சம்பத் (56). தனது ட்விட்டர் சமூக வலைதளபக்கதில், ராமர் படத் துடன் “அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள். அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோவிலை கட்டிட சபதம் ஏற்போம்” என இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத் தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பதி விட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னையை சேர்ந்த தடா ரஹீம் என்பவர் சர்ச்சைக்குரிய கலவரத்தை தூண் டும் வகையில் பதில் அளித்து இருந்தார். இதனையடுத்து, கோவை பந்தைய சாலை போலீசார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் தடா ரஹீம் ஆகிய இருவர் மீதும் தனித்தனியாக, இரு பிரிவினர் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிடுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவ றாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மாடுகள் விற்பனை
நாமக்கல், டிச.7- நாமக்கல்லில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற் பனை செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த புதன்சந்தையில் மாட்டுச் சந்தை நடைபெற்றது. இதில், மாடுகளை வாங்கவும், விற்க வும் கேரளா, கர்நாடகா மாநி லம் மற்றும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஏரா ளமானோர் வந்திருந்தனர். இதில் இறைச்சி மாடு ரூ.15 ஆயிரத்திற்கும், கன்று குட்டி ரூ.8 ஆயிரத்திற்கும், பசு ரூ.20 ஆயிரத்திற்கும், எருமை ரூ.25 ஆயிரத்திற்கும் விற் பனை செய்யப்பட்டது. மொத் தம் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றதாக ஏல அதிகாரிகள் தெரிவித்த னர்.