ஈரோடு, பிப். 1- மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந் தில் இலவச பயண அனுமதி வழங்க வேண் டும் என தாளவாடியில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாற்று திறனாளிகள் கோரிக் கையை முன்வைத்தனர். ஈரோடு மாவட்டம், கோபி கோட்டம், தாள வாடியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வரு வாய் கோட்டாட்சியர் கு.திவ்ய பிரியதர்ஷினி தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி முன் னிலை வகித்தார். இதில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் அளித்த னர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்களுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஆ.சகாதேவன், மாவட்டத் தலைவர் டி.சா வித்திரி ஆகியோர் கூறுகையில், தாளவாடி பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிட வசதி அமைத்திட வேண்டும். நகரப் பேருந்து ஒன்று கூடுதலாக இயக்கப்பட வேண்டும் அல்லது புறநகர் பேருந்தில் மாற்றுத்திறனாளிக ளுக்கு இலவச பயண அனுமதி அளிக்க வேண்டும். 100 நாள் வேலைக்கு பதிவு செய் யும் பொழுது ஊராட்சி நிர்வாகங்கள் குடிநீர் கட்டணம், சொத்து வரி உடனடியாக கட்டி னால் மட்டுமே வேலை அட்டை தரப்படும் என்று நிர்பந்திப்பதை அனுமதிக்க கூடாது. மேலும் 100 நாள் வேலையில் ஊதிய நிலு வையை வழங்க வேண்டும். ரயில் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அத்துடன் உதவித்தொகை, அவையங்கள், பிரத்யேக செயலியுடன் செல் போன், இலவச வீட்டுமனை, போன்ற மனுக் கள் கொடுக்கப்பட்டன. சங்கத்தின் முயற்சியால் 8 மாற்றத்திற னாளிகளுக்கு செயற்கை கால், செயற்கை பார்வை குறைபாடுயுடைய மாற்றுத்திற னாளிகளுக்கு, காது கேளாத மாற்றத்திறனா ளிகள், வாய் பேச இயலாத மாற்றத்தினாளி கள் 8 பேர்களுக்கு தக்க செயலியுடன் கூடிய செல்போன்கள் பெற்றுத் தரப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தாலுகா தலைவர் குப்புத்தாயம்மாள், செயலாளர் நாசீர் பேக், பொருளாளர் சாம்ராஜ், உதவி தலைவர்கள் ராமண்ணா, உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.