தருமபுரி, பிப்.19- அரசு மற்றும் தனியார் துறைகளில், 5 சதவிகித இடஒதுக் கீட்டு கோரிக்கையை அமல்படுத்த வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஏரியூர் பகுதிக்குழு அமைப்பு பேரவை கூட்டம், ஏரியூரில் குமார் தலை மையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலப் பொருளா ளர் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, மாவட் டத் தலைவர் கே.ஜி.கரூரான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோர்க ளுக்கு ரூ.8 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏஏஓ வகை குடும்ப அட்டை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீட்டை கோரிக் கையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஏரியூர் பகுதிக் குழு தலைவராக மதியழகன், செயலாளராக குமார், பொரு ளாளராக விஸ்வநாதன், துணைத்தலைவராக மாதப்பன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் துணைச்செயலாளர் சின்ன மாதையன், பாலக் கோடு வட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ், நிர்வாகிகள் விஸ்வ நாதன், பி.கே.மாரியப்பன், காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.