உடுமலை, பிப்.10- காலாவதியான பொருள்களை மக்கள் நடமாட்டம் இருக் கும் பகுதியிலும், சாலையோரங்களிலும் மொத்தமாகப் போடு வதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மொத்த வியாபாரிகள் தங்கள் விற்பனை செய்ய முடியாத மற்றும் காலாவதியான பொருட்களை சாலை ஓரங்களில் மற்றும் குப் பைகளுடன் சேர்ந்து வீசி செல்வதாக சமூக ஆர்வலர்கள் தெரி விக்கின்றனர். மேலும், சிலர் இந்த பொருட்களை தீ வைப்ப தால் கரும் புகையுடன், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகா தார கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று காலாவ தியான பொருட்களை முறையாக அப்புறப்படுத்தாமல், வீதிக ளில் வீசி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.