districts

img

100 நாள் வேலையை முறையாக வழங்குக

பென்னாகரம், பிப்.21- நூறுநாள் வேலையை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைக்கான சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட் டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையை முறையாக வழங்க வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு மணி நேரம் வேலையை நிர்ணயித்து வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அவமரியாதியாக பேசும் பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங் கத்தின் சார்பில் பென்னாகரம் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்  பென்னாகரம் பகுதி குழு தலைவர் பி.சக்தி வேல் தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் கே.ஜி கருவூரான், முன்னாள் மாவட்ட தலை வர் பி கே மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சின்னம்பள்ளி பகுதி செய லாளர் ஜி.சக்திவேல், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆ.ஜீவா னந்தம் உள்ளிட்டோர் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து, கோரிக்கை மனுவை பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கநாதனிடம் அளித்தனர். தருமபுரியில் பல்வேறு இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில், மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தே.வில் சன், மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து, பொருளாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்றனர். 

நாமக்கல்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில், நாமக்கல்  மாவட்டத்தில் 15 மையங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. பள்ளிபாளையம், திருச்செங் கோடு, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், பரமத்தி, கபிலர்மலை, மோகனூர், நாமக் கல், ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப் பேட்டை, சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி, புதுச்சத்திரம் உள்ளிட்ட 15 மையங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக் கும் போராட்டம் நடைபெற்றது. இதில், சங் கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஏ.ரங்கசாமி, மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர் முருகேசன், கிளை தலைவர் பி.செந்தில், சிஐடியு கே.எஸ். வெங்கடாசலம், சந்திரன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.

ஈரோடு

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார் பில், ஈரோடு மாவட்டத்தில் 6 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பவானி வட்டார வளர்ச்சி அலவலகம் முன்பு தாலுகா தலைவர் என்.சின்னுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் வி. ராஜீ உரையாற்றினார். ததீஒமு மாவட்ட தலை வர் பிபி.பழனிசாமி, சிஐடியு செயலாளர் ஏ. ஜெகநாதன், விதொச செயலாளர் எஸ்.மாணிக் கம் ஆகியோர் உரையாற்றினார்.