districts

img

தில்லி பேரணி விளக்க பிரச்சாரம்

ஈரோடு, மார்ச் 18- தொழிலாளர்கள், விவ சாயிகள், விவசாய தொழி லாளர்கள் பங்கேற்கும் தில்லி பேரணி விளக்க இரு சக்கர வாகன பிரச்சாரம் கோபியில் நடைபெற்றது. வேலையின்மை, விலை வாசி உயர்வு, சிறு, குறு,  நடுத்தர தொழில்கள் நலிவு, ஆதரவற்ற நிலை யில் விவசாயம் உள்ளிட்ட ஒன்றிய பாஜக  அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து ஏப்ரல் 5ஆம் தேதியன்று தில்லியில்  பேரணி நடைபெற உள்ளது. இதனை விளக்கும் வகையில் தொழிலாளர்கள், விவ சாயிகள், விவசாய தொழிலாளர் அமைப்பு கள் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது.  இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், கோபியில் வேட்டைக்காரன் கோயில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை  குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோபி கோட்ட செயலாளர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். திரளான தொழிலாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.