districts

img

பாஜக பிரமுகர் தூண்டுதலால் சாதி ஆதிக்கவாதிகள் தாக்குதல் பாதுகாப்பு வழங்க தலித் இளைஞர் எஸ்.பி.யிடம் கோரிக்கை

திருப்பூர், நவ. 17 – திருப்பூர் அருகே கொடுவாயில் தலித் இளைஞரை காரில் கடத்திச் சென்று சாதி ஆதிக்கவாதிகள் தாக்கிய  சம்பவம் குருக்கபாளையம் ஊராட்சி மன்றத் தலைவரின் மகனான, பாஜக பிர முகர் தூண்டுதலால் நடைபெற்றது என்றும், பாதிக்கப்பட்ட தனக்கும், தனது  குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கி, குற்றவாளிகள் அனைவரையும் கைது  செய்ய வேண்டும் என்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள் ளது. இது பற்றிய விவரம் வருமாறு: கொடுவாய் சந்தை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் (29). இவருக்கு மனைவி மதுமிதா மற்றும் மகள் மிரு திள்யா ஶ்ரீ ஆகியோர் உள்ளனர். பிரதாப்  தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது தாயார் பாப்பா திருப்பூரில் சமையலராக வேலை செய்து வருகிறார். கடந்த 7ஆம்  தேதி திருப்பூரில் இருந்து வேலை முடிந்து, பஸ்ஸில் வந்த தனது அம் மாவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற் காக பிரதாப், கொடுவாய் ஏ.எம்.சி மருத் துவமனை எதிரில் உள்ள தனது நண்ப ரின் பஞ்சர் கடையில் அமர்ந்திருந்தார்.  அப்போது அங்கு வந்த ஆண்டிப்புதூ ரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர், பிர தாப்பின் சாதியை கேட்டு கீழ் சாதிக்கா ரர் மேல் சாதிக்காரர் வந்தால் எழுந்தி ருக்க மாட்டாயா என்று கேட்டு தகராறு செய்து இவரது இருசக்கர வாகன சாவியை பறித்துக் கொண்டார். இப்பிரச்சனையின் தொடர்ச்சியாக மறுநாள் இருசக்கர வாகனத்தில் வந்த  பிரதாப்பை நவீன்குமார் மற்றும் அவரு டன் வந்த ஒரு கும்பல் வாகனத்தின் மீது  மோதி அவரை பிடித்து காரில் கடத்திச்  சென்றனர். கொடுவாய் ஓலப்பாளை யம் அருகில் உள்ள ஒரு தென்னந்தோப் பிற்கு கொண்டு சென்று பிரதாபின் கை  கால்களை கட்டி வைத்து கைகளாலும், தென்னை மட்டையாலும், இரும்பு கம் பியாலும் தாக்கியுளளனர். பிரதாப்பின் நண்பர் பிரேம்குமார் மூலம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் கவனத்திற்கு கொண்டுவரப்பட் டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் எஸ்.பி. அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசி, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, பிர தாப் மீட்கப்பட்டார். அவர் திருப்பூர் அரசு  மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி  முதல் உள்நோயாளியாக சேர்க்கப் பட்டு சிகிச்சை முடிந்து 14ஆம் தேதி வீட் டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இதையடுத்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் பிரதாப் வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்  கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படை யில் நவீன் குமார், நந்தகுமார், அருண்,  ரமேஷ், மணி, சேனாதிபதி, சேகர் கதிரே சன் உள்ளிட்டோர் மீது எஸ்சி எஸ்டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த முதல் தகவல் அறிக் கையில் பிரதாப் மீது சாதி ஆதிக்க கும் பல் தாக்குதல் நடத்தியதில் குருக்கம் பாளையம் ஊராட்சிமன்றத் தலைவ ரின் மகன் விவேகானந்தன் பாஜகவை  சேர்ந்தவர். அவர் பிரதாப்பிடம் நான் தான் உன்னை கடத்திக் கொண்டு வரச் சொன்னேன். உன்னால் என்ன செய்ய முடியும்? என்று மிரட்டியதாகவும், இச் சம்பவத்திற்கு முழுவதும் தூண்டுதலா கவும், உடந்தையாகவும் இருந்து செயல்பட்டவர் பாஜகவை சேர்ந்த விவேகானந்தன்தான் என்றும் குறிப்பிட் டிருந்தார். அந்த அடிப்படையில் முதல் தகவல்  அறிக்கையில் திருத்தம் செய்து சம்பந் தப்பட்ட அனைவரையும் கைது செய்ய  வேண்டும், பாதிக்கப்பட்ட தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வியாழ னன்று மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் நிர் வாகிகள் பங்கேற்றனர்.