districts

img

வட இந்தியாவிலும் மோடிக்கு தோல்விதான் இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதி

கோபி, மார்ச் 25- வட இந்தியாவில் மோடிக்கு ஆதரவு என்பது வெறும் மாயையே  தவிர, அங்கு கூட்டப்படும் கூட்டங் களுக்கு மக்கள் வரவில்லை என்பதே உண்மை. அதனால், தான்  தமிழகம் வந்து கூலிக்கு ஆட்களை  சேர்த்து கூட்டங்கள் நடத்துகின்ற னர் என ஈரோடு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ். இளங்கோவன் சாடினார். ஈரோடு மாவட்டம், கோபிசெட் டிபாளையம் கச்சேரிமேடு பகு தியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பா ளர் அறிமுக கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் திருப்பூர் நாடா ளுமன்ற தொகுதி வேட்பாளர் சுப்ராயனை காங்கிரஸ் கட்சி  தொண்டர்களிடையே அறிமுகப்ப டுத்திய ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வன், தொடர்ந்து தொண்டர்களு டன் ஆலோசனை மேற்கொண்டார் இதனைதொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியா கூட்டணி என்பது ஒரு  மிகப்பெரிய கூட்டணி. இக்கூட்டணி  கொள்கை அளவில் உருவான கூட்டணி. நாட்டில் ஜனநாயகம் காப் பாற்றப்பட வேண்டும். நாட்டினு டைய உரிமை காப்பாற்றப் பட வேண்டும். நாடு மதத்தின் பெய ரால், ஜாதியின் பெயரால் பிளவு பட்டு போகக்கூடாது என்ற மக்க ளின் மீதும், இந்த நாட்டின் மீதும் உள்ள பற்றுதல் காரணமாக ஒன் றாக சேர்ந்திருக்கின்றோம். இந்தியா கூட்டணி நாடு முழுவதும்  பெரும் வெற்றியை பெரும் என்பது  கள நிலவரம் தெரிவிக்கிறது.  ஆகவே, வேறு இடம் கிடைக்கா ததால் மோடி அடிக்கடி தமிழகம்  வருகிறார். தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித் துள்ளார். எதற்கு தங்குகிறார்? யாருக்காக தங்குகிறார்? என்பதை  நாங்கள் விரைவில் வெளியிடு வோம். வட இந்தியாவில் மோடிக்கு  ஆதரவு என்பது வெறும் மாயையே  தவிர, வட இந்தியாவில் கூட்டப்ப டும் கூட்டங்களுக்கு மக்கள் வர வில்லை என்பதே உண்மை. அத னால், தான் தமிழகம் வந்து கூலிக்கு  ஆட்களை சேர்த்து கூட்டங்கள் நடத்துகின்றனர். தேர்தலுக்குப் பிறகு எங்கே பாஜக என போஸ்டர்  ஒட்டும் அளவிற்கு நிலைமை வந்து விடும் என நகைப்புடன் தெரிவித் தார். மேலும், தமிழகத்தில் வெற்றி பெறும் வேட்பாளர் பட்டியலில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுப்பராயன் இருப்பார். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.