districts

img

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீடீர் தர்ணா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது - பரபரப்பு

கோவை, பிப்.18- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக முன் னாள் அமைச்சர் எஸ்.பி வேலு மணி உட்பட 9 சட்டமன்ற உறுப் பினர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கோவையில் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு (இன்று) சனியன்று நடை பெற உள்ளது. இத்தேர்தலில் எப் படியாவது தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ள பிரதான எதிர்கட்சியான அதிமுக பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், தேர்தல் களம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சாதக மாக இருப்பதால், அதிமுகவினர் கடும் நெருக்கடிக்குள்ளாகி உள் ளனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருடன் அதிமுக வினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் கடந்த இரு தினங் களாக அதிகரித்துள்ளது.  இந்நிலையில், கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளியன்று காலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீடீ ரென முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் காவல் ஆணையர் ஜெய சந்திரன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்த முயற்சித்தனர். ஆனால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கள் அதனை ஏற்க மறுத்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் மேட்டுப் பாளையம் செல்வராஜ், கவுண் டம்பாளையம் அருண்குமார், கோவை வடக்கு அம்மன் அர்ஜூ னன், சிங்காநல்லூர் ஜெயராமன், சூலூர் கந்தசாமி, வால்பாறை அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு தாமோ தரன் உள்ளிட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்த னர். இச்சம்பவத்தால் கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.