தருமபுரி, ஆக.2- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கடந்த சில தினங் களுக்கு முன்பு பெய்த கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப் பட்டது. இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது பெய்ததது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 3,983 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து சரிந்து காணப்பட்டது. செவ்வாயன்று மாலை 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, புதனன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு 4 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது. கர்நாடகா - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் நீரினை அளவீடு செய்து கண்காணித்து வரு கின்றனர்.