districts

img

“கதவை திறக்கலைன்னா பூட்டை உடைப்போம்”

சேலம், ஜன.6- “கேட்டை திறக்கலைன்னா பூட்டை உடைப்போம்” என்ற முழக் கத்தை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பு வெகுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காலங் காலமாக பொதுமக்க ளுக்கு வழி விடாமல் சாலையை தனியார் ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு அமைத்து வருவதை கண்டித்து, உடனடியாக தடுப்பை அப்புறப்படுத்த வேண்டும் வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கள ஆய்வில் ஈடுபட் டனர். சேலம் மாவட்டம், ஏற்காடு  தாலுகா, டவுன் பஞ்சாயத்துக் குட்பட்ட பகுதியில் 150க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இவர்கள் வெளியிடங் களுக்கு சென்று வருவதற்கு சரி யான பேருந்து வசதி கிடையாது. மேலும், அவர்கள் சென்று வந்து கொண்டிருந்த பாதை என்பது தனியார் எஸ்டேட் முதலாளிகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. காலங்காலமாக சென்று வந்த பாதையை அண்மையில் மறித்து, இரும்பு கேட் ஒன்று போட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இத னால், பாதிக்கப்பட்ட பகுதி  மக்கள் உடல்நிலை பாதிக்கப் படுகிற பொழுதும், பிரசவம் உள் ளிட்டவைகளுக்காக சிகிச்சை பெற  கட்டிலில் தூக்கி செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை இன்றும் தொடர் கிறது. இதிலிருந்து மக்களை காத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர்கள் நேரில் சென்று கள ஆய்வு செய் தனர். தனியார் முதலாளி தடுத்து வைத்துள்ள இரும்பு கேட்டை திறந்து விட வேண்டும் என்றும் இதற்கான வலியுறுத்தலை அரசு  அதிகாரிகள் மட்டத்தில் வலியுறுத் துவது என்று முடிவு செய்யப்பட்டு  நேரடியாக சென்று வட்டாட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், பொங்கலுக்குள் இந்த பணிகளை செய்து வழித்தடத்தை ஒழுங்குப்படுத்தி தர வேண்டும் என்றும், இது தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட “கேட்டை திறத் இல்லை என்றால் பூட்டை உடைக் கும்” போராட்டத்தை மார்க்சிஸ்ட்  கட்சி நடத்தும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த  கள ஆய்வில் கட்சியின்  மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எம்.குணசேகரன், ஏற்காடு தாலுகா செயலாளர் என். நேரு மற்றும் ஏற்காடு தாலுகாக் குழு  உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.