திருப்பூர், ஜூன் 18- 100 நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து போராட சிஐடியு முடிவெடுத்துள்ளது. மடத்துக்குளத்தில் விவசாய தொழிலா ளர் சங்கத்தின் ஒன்றிய கமிட்டி கூட்டம் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடை பெற்றது. மாநில துணைத் தலைவர் வசந்தா மணி, மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், நூறு நாள் பணியாளருக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து ஜூன் 27 அன்று மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகத் தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வேலை இல் லாத இடங்களில் வேலை கோருதல், வீடி ல்லா விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை கோரி மனு கொடுக்கும் இயக்கம் நடத் துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.