districts

img

சாலைகளைச் சீரமைக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட முடிவு

திருப்பூர், நவ. 25- அனுப்பர்பாளையம் பகுதியில் குண்டும்,  குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்கா விட்டால் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எச்சரித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்ட லத்துக்குட்பட்ட அனுப்பர்பாளையம் முதல் கணியாம்பூண்டி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுத டைந்துள்ளது. மேலும் சாலையில் உள்ள குழி களால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிப் பேருந்துகள், பனியன் கம் பெனிகளின் சரக்கு வாகனங்கள், கார்கள்,  இரு சக்கர வாகனங்கள் என  நூற்றுக்கணக்கான வாக னங்கள் செல்லும் சாலை  மோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகின்றனர். பலர் கீழே விழுந்து கை, கால்  முறிந்து வேலைக்குச் செல்ல  முடியாமல் மருத்துவச் செல வையும் ஈடுகட்ட முடியாமல் பரிதவித்து வருகின்ற னர்.  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இந்த சாலையைச் சீரமைக்க கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை  மறியல் போராட்டம் ஈடுபட்டனர். அப்போ தைக்கு சில வேலைகளை செய்த நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள், சாலையை முழு மையாக சீரமைக்கவில்லை. இந்தச் சாலை யின் முக்கியதுவத்தைக் கருத்தில் கொண்டு,  நெடுஞ்சாலைத் துறை உடனடியாக முழுமை யாகச் சீரமைத்துத் தர வேண்டும். இல்லாவிட் டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்து வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  15 வேலம்பாளையம் நகரக் குழு எச்சரிக்கை  விடுத்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி யில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.