districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவையில் பூக்கள் விலை உயர்வு

கோவை, டிச.6- கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு மற்றும் கார்த் திகை தீபத்தையொட்டி கோவையில் பூக்கள் விலை வெகு வாக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல் பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம், ஒசூர், சேலம், நிலக்கோட்டையிலிருந்து முல்லை, மல்லிகை , ரோஜா, காக்கடா பூக்கள், அரளி, குண்டுமல்லி ஆகியவை விற்பனைக்கு வருகிறது. கடந்த சில தினங்களாக கடும் பனிப் பொழிவு காரணமாக பூக்கள் வரத்து சற்று குறைவாக உள் ளது. இதனால் பூக்களின் விலை அதிகரித்து காணப்படு கிறது. மேலும், தொடர் மூகூர்த்தங்கள், கார்த்திகை தீபம் போன்றவற்றால் பூக்கள் விற்பனை அதிகளவில் இருந்தது. இதனால் கோவை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி கைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. மேலும், செவ் வந்தி ரூ.100, ரோஜா ரூ.160, கோழி கொண்டை ரூ.30 முதல் ரூ.60, அரளி ரூ.240, சம்பங்கி ரூ.60, வாடாமல்லி ரூ.80, மரிக் கொழுந்து 1 கட்டு ரூ.50, காக்கடை ரூ.400, செண்டுமல்லி ரூ.160, மருகு ஒரு கட்டு ரூ.30, தாமரை ஒன்று ரூ.15க்கும் விற்பனையானது. பூக்கள் வாங்க மார்கெட்டுக்கு பொது மக்கள் குவிந்ததால், செவ்வாயன்று காலை முதலே அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது  நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூ வரத்து குறை வாகவே உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிப்காட் விபத்தில் ஒருவர் பலி

ஈரோடு, டிச.6- பெருந்துறை சிப்காட்டில் உள்ள கட்டுமான நிறுவனத் தில் வேலை செய்து வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழி லாளி பணியின்போது நேர்ந்த விபத்தில் பலியானார். கரூர் மாவட்டம், கடாயூர் வட்டம், செங்காடூர் பகுதியைச்  சேர்ந்தவர் முருகேசன் (28). இவர் பெருந்துறை, சிப்காட்டில்  உள்ள எம்ஒய்கெ லேட்க்ரீட் என்ற கம்பெனியின் எஸ்கே கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  இதனிடையே கடந்த நவ.11 ஆம் தேதியன்று தினேஸ்குமார், சக்திவேல், சிவா ஆகியோருடன் முருகேசன் சுவரை இடித் துக் கொண்டிருந்தார். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் முருகேசனுக்கு வலது கால் நசுங்கி கீழே விழுந்துள்ளார். இத னால் முருகேசனின் பின்னகழுத்தில் அடிப்பட்டுள்ளது. இதன் பின் முருகேசன் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்  சிகிச்சைக்காக முருகேசனை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகேசன், ஞாயிறன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெருந்துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

11 ஆண்டுகளாக மனுபோட்ட மாற்றுத்திறனாளி

ஈரோடு, டிச.6- ஈரோடு மாநகரில் சூரம்பட்டியைச் சேர்ந்த வர் நல்லசிவம். மாற்றுத்திறனாளியான இவர்  கடந்த 11 ஆண்டுகளாக உதவித்தொகை கோரி மனு அளித்து வந்தார். இதற்கிடையே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான நலசங்கத்தின் உதவியோடு, கடந்த மே  மாதம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை யினை பெற்றார். அத்துடன் அந்த மாதம் உத வித்தொகையும் வந்தது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களாக உதவித்தொகை அளிக்கப்பட வில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நல்லசிவம் மனு அளித்துள்ளார். இவரைப்போல இபிபி நகரைச் சேர்ந்த  மல்லிகா, பானு மற்றும் பெரியசேமூரைச் சேர்ந்த கணேஷ் வடிவேல் ஆகியோர் உத்த ரவு பெற்றும், உதவித்தொகை வழங்கப்பட வில்லை என முறையிட்டுள்ளனர்.

இறைச்சி கழிவுகளால் மாசுபடும் ஆறு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க முடிவு

கோவை, டிச.6- இறைச்சி கழிவுகளால் ஆறு மாசுபடு வதை தடுக்க ஆனைமலையில் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடை பெற்று வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப் படும் குப்பையை சேகரிக்கும் பணியில் 38  தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில், ஆனைமலை ஆற்றங்கரையின் ஓரத்தில் இரவு நேரத்தில் சிலர் கோழிக்கழிவு மற்றும் உணவு விடுதிகளின் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்றங் கரையில் கழிவுகள் குவிந்து ஆற்றுநீர் மாசு படும் அபாயம் உள்ளது. இதனிடையே ஆனை மலை ஆற்றில் செல்லும் தண்ணீர், அம்பராம் பாளையம் பகுதியில் குடிநீர் திட்டத்துக்கு பயன்பட்டு வருகிறது. இதனால் ஆனை மலை ஆற்றங்கரையில் கழிவுகள் கொட்டு வதை தடுக்கவும், நகரில் பல இடங்களில் குப்பையை கொட்டி சுகாதார கேடு ஏற்படு வதை தடுக்கவும் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை பேரூ ராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. முதற் கட்டமாக 12 ஆவது வார்டில் ஆற்றங்க ரைக்கு செல்லும் மயானப் பாதையிலும், 7  ஆவது வார்டில் ராமபுரம் விதியிலும் கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ஆனைமலை ஆற்றங்கரையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் பேருராட்சி சார்பில்  இரவு நேரத்தில் காவலாளி நியமிக்கப்பட் டார். இதனால் கழிவுகள் கொட்டுவது ஓரளவு தடுக்கப்பட்டது. ஆனாலும், முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால் கண்கா ணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து ஆனைமலையில் 8 இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 2  இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை செல்போன் மூலம் கண்காணிக்க முடியும். ஆற்றங்கரையில் கழிவுகளை வீசினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனம் பறிமுதல் செய்யப்படும், என்றனர்.

டிச.12ல் குறைதீர் கூட்டம்

கோவை, டிச.6- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் டிச.12 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், இணைய வழி குறைதீர் கூட்டம் டிச. 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும் பும் ஓய்வூதியர்கள், சந்தாதாரர்கள், தொழிலதிபர்கள் pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முக வரிக்கு, பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலா ளர் வருங்கால வைப்பு நிதி எண், ஓய்வூதிய நியமன ஆணை  எண், செல்போன் எண் ஆகிய விபரங்களை, டிச.8 ஆம் தேதிக் குள் (நாளைக்குள்) அனுப்ப வேண்டும். குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான, லிங்க் அவர்களது மின்னஞ்சல் முக வரிக்கு அனுப்பப்படும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தெரிவித்துள்ளார்.

புலிகள் கணக்கெடுப்பு

திருப்பூர், டிச. 6 - திருப்பூர் வனக்கோட் டம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், மானுப்பட்டி  பிரிவு, கொட்டையாறு சுற் றில், ஜல்லிமுத்தாம் பாறை மற்றும் உலிவையாறு வனப் பகுதியில் செவ்வாய்க்கி ழமை புலிகள் கணக்கெடுப் பின் முதல் நாளில் புலி, சிறுத்தை, பிற ஊனுண்ணி மற்றும் பெரிய தாவர உண் ணிகளின் தடய கணக்கெ டுப்பு பணி மேற்கொள்ளப் பட்டது.  இதில் சிறுத்தையின் காலடித்தடம், சிறுத்தையின் எச்சம், கரடியின் எச்சம், யானைகளின் நடமாட்டம் போன்றவை பதிவு செய்யப் பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) காலை நேர தொடர் வகுப்பு

அரசியல் சாசன விழுமியங்களும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும் 08.12.2022 வியாழக்கிழமை காலை 6.30 - 7.30 மணி தலைப்பு: சோசலிச நாடுகளின்  அரசியல் சாசனம் கருத்துரை: அன்வர் உசேன்

காவலருடன் வம்பு: பாஜக நிர்வாகி கைது

திருப்பூர், டிச. 6 - காங்கேயத்தில் தனது சட்டையை கழற்றி வைத்து விட்டு  ஒத்தைக்கு ஒத்தை வா என காவலரை வம்புக்கு இழுத்த பாஜக  நிர்வாகி கைது செய்யப்பட்டார். தாராபுரத்தில் இருந்து காங்கேயம் வந்த அரசு பேருந்தில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக போலீசாருக்கும், பாஜக நிர்வாகிக்கும் இடையே பிரச்சனை நடைபெற்றுள் ளது. இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் காங்கேயம்  அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்று  போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பிலும் விசாரிக்கையில் இரு  தரப்பினருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது, பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன்,  நகர தலைவர் சிவபிரகாஷ் உள்பட சில நிர்வாகிகள் சிலருடன்  சேர்ந்து கொண்டு பாஜக மாவட்ட செயலாளர் ராஜா பணியில்  இருந்த ரமேஷ் என்ற காவலரிடம் ஒருமையில் பேசியதுடன்,  சட்டையை கழற்றி வைத்து விட்டு வா! ஒத்தைக்கு ஒத்தை  பாக்கலாம், என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு சக  போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். இது குறித்து வீடியோ  இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த தாக திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராஜா கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:46.10/60அடி 
நீர்வரத்து:810கன அடி
வெளியேற்றம்:1012கன   அடி
அமராவதி அணை 
நீர்மட்டம்: 89.41/90அடி.
நீர்வரத்து:858கனஅடிவெளியேற்றம்:921கன அடி

திருப்பூர் மாவட்டத்தில் 13 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

திருப்பூர், டிச. 6 – திருப்பூர் மாவட்டத்தில் நிர்வாகநலன் கருதி 13 துணை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட ஆட் சியர் எஸ்.வினீத் அண்மையில் பிறப்பித்துள் ளார். அவிநாசி வட்டார தணிக்கைப் பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கே. வேலுச்சாமி, அதே வட்டாரத்தில் ஊராட்சி கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார். தாராபுரம் தணிக்கை து.வ. வ.அலுவலர் என்.சுப்பிரமணியன் மூலனூர்  வட்டார நூறு நாள் திட்ட து.வ.வ. அலுவலரா கவும், குடிமங்கலம் (தணிக்கை) து.வ.வ. அலுவலர் எம்.நாகலிங்கம் உடுமலை வட்டார  நூறு நாள் வேலை திட்ட து.வ.வ. அலுவலரா கவும், காங்கேயம் வட்டார தணிக்கை து.வ.  வ. அலுவலர் கே.சரவணன் பல்லடம் வட்டார  பொது து.வ.வ. அலுவலராகவும், குண்டடம்  ப.சந்தானகிருஷ்ணன் தாராபுரம் வட்டார  ஊ.து. வட்டார வளர்ச்சி அலுவலராகவும்,  மடத்துக்குளம் வட்டார தணிக்கை துணை. வ.வ.அலுவலர் என்.ஐ.அனார்கலி குடிமங்க லம் வட்டார து.வ.வ.அலுவலராகவும், மூல னூர் வட்டார தணிக்கை துணை வ.வ. அலுவலர் எம்.குமரகுருபரன் மடத்துக்கு ளம் வட்டார சத்துணவு துணை.வ.வ.அலு வலராகவும், பல்லடம் வட்டார தணிக்கை து.வ.வ.அலுவலர் எஸ்.பாரத்கண்ணன், அதே வட்டார நூறு நாள் வேலை திட்ட து.வ. வ.அலுவலராகவும், பொங்கலூர் தணிக்கை  து.வ.வ.அலுவலர் கே.கி.அனுராதா அதே வட்டார பொது து.வ.வ.அலுவலராகவும், திருப்பூர் வட்டார தணிக்கை து.வ.வ. அலுவலர் ரெ.கோகிலா, ஊத்துக்குளி வட் டார நூறு நாள் வேலை திட்ட து.வ. வ.அலுவலராகவும், உடுமலை தணிக்கை து. வ.வ.அலுவலர் க.ரங்கநாதன், அதே வட்டார  பொது து.வ.வ.அலுவலராகவும், ஊத்துக் குளி வட்டார தணிக்கை து.வ.வ.அலுவலர் ஆர்.வெண்ணிலா, பொங்கலூர் வட்டார மண் டல து.வ.வ.அலுவலராகவும், வெள்ளகோ வில் வட்டார தணிக்கை து.வ.வ.அலுவலர் பி. புஷ்பவள்ளி மூலனூர் வட்டார ஊராட்சிகள் து.வ.வ.அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி வட் டார கணக்கராக பணியாற்றிய வி.யசோதா வுக்கு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலு வலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

போயம்பாளையம் சாலையை செப்பனிடாவிட்டால்  காத்திருப்புப் போராட்டம் நடத்த சிபிஐ முடிவு

திருப்பூர், டிச. 6 - திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளை யம் பிரிவில் இருந்து கூலிபாளையம் செல் லும் சாலையை செப்பனிடாவிட்டால் நெடுஞ் சாலைத் துறை அலுவலகம் முன்பாக மக்க ளைத் திரட்டி காத்திருப்புப் போராட்டம் நடத் தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறி யுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போயம்பா ளையம் கிளை சார்பில் நெடுஞ்சாலை துறை  செயற்பொறியாளர் ராஜேஷிடம் கோரிக்கை  மனு வழங்கப்பட்டது. இந்த மனுவில் கூறப் பட்டு இருப்பதாவது:  பெருமாநல்லூர் சாலை போயம்பாளை யம் பிரிவில் இருந்து கிழக்கே பெரிய பொம்ம நாயக்கன்பாளையம் வழியாக கூலிபாளை யம் செல்லும் சாலை நெடுஞ்சாலை துறைக்கு  சொந்தமானதாகும். சுமார் மூன்று ஆண்டுக ளுக்கு முன்பு திருப்பூர் மாநகராட்சியால் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக் கும் பணி ஆகிய காரணங்களுக்காக இந்த  சாலையில் குழிகள் தோண்டப்பட்டு வேலை கள் நடைபெற்றது. இந்த சாலை முழுவதும்  சேதம் அடைந்து மக்கள் பயன்படுத்த முடி யாத அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளது. சிறிதளவு மழை பெய்தால் கூட மரண பள்ளங்கள் இருப்பதால், இரண்டு சக் கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். பலருக்கு கை  கால்கள் முறிந்து படுகாயங்களும் ஏற்பட் டுள்ளது. இந்த சாலைக்கு மாற்று சாலை  எதுவும் இல்லை. எனவே இந்த சாலையை உடனடியாக தார் சாலையாக மாற்றி தர வேண்டும், இனியும் காலம் கடத்தாமல் 15 நாட்களுக்குள் பணியை துவக்க வேண்டும், தவறும் பட்சத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில்  சாலை பணியைத் தொடங் கும் வரை பொதுமக்களை திரட்டி காத்திருப்பு  போராட்டம் நடத்தப்படும் என்று இம்மனுவில்  கூறப்பட்டுள்ளது. ஏஐடியூசி மாவட்ட தலைவர் எம்.மோகன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது மண் டல குழு செயலாளர் வி.எஸ்.சசிகுமார், ஏஐடி யுசி மோட்டார் சங்க பொதுச் செயலாளர் கே. சுரேஷ் உள்ளிட்டோர் நேரில் மனு வழங்கி னர்.

புலிகள் கணக்கெடுப்பு

திருப்பூர், டிச. 6 - திருப்பூர் வனக்கோட் டம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், மானுப்பட்டி  பிரிவு, கொட்டையாறு சுற் றில், ஜல்லிமுத்தாம் பாறை மற்றும் உலிவையாறு வனப் பகுதியில் செவ்வாய்க்கி ழமை புலிகள் கணக்கெடுப் பின் முதல் நாளில் புலி, சிறுத்தை, பிற ஊனுண்ணி மற்றும் பெரிய தாவர உண் ணிகளின் தடய கணக்கெ டுப்பு பணி மேற்கொள்ளப் பட்டது.  இதில் சிறுத்தையின் காலடித்தடம், சிறுத்தையின் எச்சம், கரடியின் எச்சம், யானைகளின் நடமாட்டம் போன்றவை பதிவு செய்யப் பட்டது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை  குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

உதகை, டிச.6- சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை பகுதியை சேர்ந்த  தம்பதிக்கு 8 வயது சிறுமி உள்ளார். அந்த பகுதியில் அரசு  பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். தம்பதியினர் இரு வரும் அந்த பகுதியில் உள்ள எஸ்டேட்டுக்கு தினந்தோறும் வேலைக்கு சென்று விடுவார்கள். இந்நிலையில் கடந்த  17-5-2018 அன்று வீட்டில் யாரும் நேரத்தில் தம்பதியின் உறவுக் காரர் பாலன் (49) என்பவர், சிறுமியை தனது வீட்டிற்கு  அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி  யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், திடீரென  கழித்து வயிற்றுப் பகுதியில் வலி இருப்பதாக கூறி பெற் றோரிடம் அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் சோதித்து பார்த்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியின் பெற் றோர் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் சிறுமியின் உறவுக்காரரான பாலன் சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது  செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை உதகை மகிளா  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதுகுறித்த தீர்ப்பு திங்க ளன்று வழங்கப்பட்டது. இதன்படி சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ்  20 ஆண்டு சிறை தண்டனையும், 506(1) -கொலை மிரட்டல் குற்றத்திற்காக 3 மாதம் சிறை தண்டனையும் ரூ.1000 அப ராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நாராயணன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்  ஆஜராகி வாதாடினார். இதைத்தொடர்ந்து, ஜாமினில் வெளியே வந்த பாலன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.