districts

கலையரங்கம், ஆய்வகத்தை வாடகைக்கு விட முடிவு பெரியார் பல்கலை.,க்கு மாணவர் சங்கம் கண்டனம்

சேலம், செப்.3- சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆய்வ கம், கலையரங்கம் உள்ளிட்டவைகளை வாட கைக்கு விடும் முடிவுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவா ளர் தங்கவேல் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது, பல்கலைக்கழகத்தில் பல் வேறு துறைகளில் உள்ள அறைகள், கூட்ட ரங்குகள், கணினி ஆய்வகங்கள், பிற அரசு அலுவலகங்கள், அரசு சார் நிகழ்ச்சிகள், அரசு ஊழியர் பயிற்சி, தேர்வு தொடர்பான பணிக ளுக்கு வழங்க ஏதுவாக வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெரி யார் கலையரங்கம் ஜிஎஸ்டியுடன் ஒரு  நாளுக்கு ரூ.47,200, கணினி ஆய்வகங்கள் ரூ.9,440, ஜெனரேட்டர் பயன்படுத்தினால் ஒரு  மணி நேரத்திற்கு ரூ.1,000, குளிரூட்டப்பட்ட  கருத்தரங்கு அறை ரூ.11,800 (ஜெனரேட்டர்  பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.500,) குளிரூட்டப்படாத கருத்தரங்கு அறை  ரூ.8,260, வகுப்பறைக்கு ரூ.1,416 என வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பவித் ரன், மாவட்டத் தலைவர் அருண்குமார் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழகங்கள் லாப நோக்கில் நடப்பதில்லை. சேவை நோக்கில் செயல்படுகிறது. ஆனால், மாணவர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட பல்கலைக் கழக கலையரங்கம் மற்றும் ஆய்வுக்கூடங் கள் தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தால் லாப நோக்கத்திற்காக வாடகைக்கு விடப் படும் என்ற அறிவிப்பு மாணவர் நலனுக்கு எதிரானது. பல்கலைக்கழக கருத்தரங்கம், ஆய்வக கட்டடங்கள் என அனைத்தும் மாண வர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக மட் டுமே பயன்படுத்த வேண்டும். இதில் தனிநபர் பயன்பாடு இருந்தால், பல்கலைக்கழக சாராம் சம் மாணவர்கள் மத்தியில் இல்லாமல், கலாச் சார இடமாக மாறும் பாதிப்புள்ளது. கல்வியை மூலதனமாக கொள்ள வேண் டுமே தவிர, அதை லாப நோக்கில் நடத்தக் கூடாது. எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் இந்த முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதனையும்மீறி, லாபநோக்கில் பல்கலைக்கழக கட்டடங்களை வாடகைக்கு விட்டால், மாணவர்களை திரட்டி இந்திய  மாணவர் சங்கம் சார்பில் கடுமையான போராட் டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.