நாமக்கல், ஆக. 12- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால்வளத் துறை அமைச்சரை சந்திக்க பால் உற்பத்தியாளர் சங்கத்தில் தீர்மானம் இயற்றியுள்ளனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.முகமது அலி கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதில் மாநில பொதுச் செயலாளர் பி.பெருமாள், மாநில பொருளாளர் ஏ.எம்.முனு சாமி உள்ளிட்ட மாநில நிர்வகிகள் பங்கேற்றனர். இதில் பால் கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழக பால்வளத் துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.