உடுமலை, அக். 30 - தேசிய ஊரக வேலை உறுதித் திட் டத்தில் தொழிலாளர்களுக்கு நான்கு மாதம் வரை நிலுவையில் உள்ள சம் பள பாக்கியை தீபாவளி பண்டிகைக் குள் வழங்க ஒன்றிய மோடி அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவ தென உடுமலையில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உடுமலை ஒன்றிய விவசாயத் தொழிலாளர் சங்க கமிட்டித்தலை வர் சி.முத்துச்சாமி தலைமையில் ஞாயிறன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சுந்த ரம், ஆனந்தன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஒன்றியப் பொரு ளாளர் சுப்புலட்சுமி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் அ.பஞ்ச லிங்கம் துவக்கி வைத்துப் பேசி னார். பின்னர் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நான்கு மாதம் வரை நிலுவையில் உள்ள சம்பளப் பாக்கியை தீபாவளி பண்டிகைக்குள் உடனடியாக வழங்கிட ஒன்றிய மோடி அரசை வலியுறுத்தி நவம்பர் 6ஆம் தேதி திங்களன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், ஊரக வேலை திட்டத்தில் நூறு நாட் கள் வேலை வழங்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் பழுதான பழைய தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு ரூ. 10 லட்சம் மதிப்பில் புதி தாக வீடு கட்டித்தர வேண்டும். உடு மலை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான வசதி களை ஏற்படுத்தித்தர வேண்டும். அரசு புறம்போக்கில் வகை மாற்றம் செய்து இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக் கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றபட்டன. இந்த பேரவைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியக் கமிட்டியின் தலைவராக ரங் கராஜ், செயலாளராக கனகராஜ், பொருளாளராக சுப்புலட்சுமி, துணைத்தலைவர்களாக சக்திவேல், பழனிச்சாமி, துணைச் செயலா ளராக செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக இப்பேரவை கூட் டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சண்முகம், மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் கி.கனக ராஜ், நகரச் செயலாளர் தண்ட பாணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிரவாகிகளை அறிமுகம் செய்து வைத்து மாநில துணைத்த லைவர் வசந்தாமணி நிறைவுரை ஆற் றினார். இதில் ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 ஊராட்சிகளைச் சேர்ந்த நூறு நாள் வேலைத் திட்ட தொழி லாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றியக் கமிட்டி உறுப்பினர் ஆர்.சுந்தரம் நன்றி கூறினார்.