திருப்பூர், மே 8- நூல் விலை உயர்வைக் கட்டுப் படுத்த வலியுறுத்தி மே 16, 17 ஆகிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் நடத்துவ தென திருப்பூரில் அனைத்து பின்ன லாடை மற்றும் விசைத்தறி உற்பத்தியா ளர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் ஞாயிறன்று அனைத்து தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் இந்த மண்டலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்புராயன், ஈரோடு நாடாளுமன்ற உறுப் பினர் அ.கணேசமூர்த்தி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந் தரம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகிய ஐந்து பேர் பங்கேற்ற னர். விசைத்தறி தொழில் அமைப்பு களின் முக்கிய நிர்வாகிகள் மதிவா ணன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒட்டுமொத்த ஜவு ளித் தொழிலைக் கடுமையாக பாதிக் கும் நூல் விலை உயர்வு குறித்து ஆலோ சனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச் சியாக ஒன்றிய அரசு நூல் விலை உயர் வைக் கட்டுப்படுத்த பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண் டும். அத்தியாவசியப் பொருட்கள் பட்டி யலில் பருத்தியைச் சேர்க்க வேண் டும். நூற்பாலைகள் மே 2 ஆம் தேதி உயர்த்தி அறிவித்த கிலோவுக்கு ரூ.40 என்ற விலை ஏற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கோரிக்கைகளை மையப் படுத்தி மே 16, 17 ஆகிய இரு நாட்கள் மேற்கு மாவட்டங்களில் பின்னலாடை, விசைத்தறி உள்ளிட்ட அனைத்து ஜவுளி தொழில் நிறுவனங்களும் வேலை நிறுத் தம் செய்வது என்று முடிவு செய்யப் பட்டது. இதுதொடர்பாக கரூர், ஈரோடு மற்றும் கோவையில் உள்ள அனைத்து உற்பத்தியாளர் அமைப்புகளுக்கும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, திருப்பூர் ஏற்றுமதியா ளர் சங்கம் அல்லாத பிற பின்னலாடை உற்பத்தியாளர் அமைப்புகள் மே 16 முதல் 21ஆம் தேதி வரை ஆறு நாட்கள் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்திருந்த நிலையில், தற்போது மேற்கு மாவட்டங்கள் முழுவதும் ஜவு ளித் தொழில் மையங்களில் இரு நாட் கள் வேலை நிறுத்தம் மற்றும் தமிழகம் முழுவதும் அனைத்து ஜவுளி மையங் களில் உள்ள ஜவுளி தொழில் நிறுவனங் கள் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது