சேலம், நவ.20- அருந்ததியர் மக்களை வஞ்சக மாக ஏமாற்றி ஏலம் விட்டு சாதிய ஆதிக்கவாதிகள் மற்றும் உடந்தை யாக இருந்த அதிகாரிகளை கண்டித் தும், பொது ஏலத்தை முறையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சப்பாணிப் பட்டி சோமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பசலி 1433 முதல் 1437 முடிய உள்ள காலத்திற்கு நிலம் குத் தகை சாகுபடி செய்யும் உரிமம் அதி காரிகள் முன்னிலையில் ஏலம் விடப் பட்டது. சுமார் 40.25 ஏக்கர் நிலம் சாகுபடி செய்ய ஏலம் விட திட்ட மிடப்பட்டது. ஏலத்தில் பங்கேற்ற வர்கள் முறையாக ரூ.5000 வரை கட்டி விண்ணப்பிக்க வேண்டும். இதில் புதுப்பேட்டை அருந்ததியர் மக்கள் வாழும் குடியிருப்பு அருகே 90/2 சர் வீஸ் எண்ணில் உள்ள 6.84 ஏக்கர் நிலம் ஏலம் விடப்பட்டது. இந்த நிலத்தை புதுப்பேட்டை அருந்ததியர் ஊர்மக்கள் சார்பாக ஏலம் எடுக்க இரண்டு நபர்கள் பெயரில், முறை யாக பணம் செலுத்தப்பட்டது. ஆனால், அருந்ததியர் மக்கள் ஏலம் எடுக்க விடாமல், நயவஞ்சகமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வரவிடாமல் தடுக்கக்கூடிய சாதிய வன்ம செயலை கண்டித்தும், முறையாக பொது ஏலம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நங்கவள்ளி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் கே.ராஜாத்தி தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட் டக்குழு உறுப்பினர் ஜி.கவிதா, நங்க வள்ளி ஒன்றிய குழு உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் என திர ளானோர் பங்கேற்றனர்.