திருப்பூர், மே 12 – திருப்பூர் மாநகரின் மையப் பகுதியில் அரிசிக்கடை வீதியில் சாக்கடைக் கால்வாய் மூடுவதற் காக போடப்பட்ட சிமெண்ட் பலகை கள் இடிந்து பள்ளமாக உள்ளன. ஏராளமானோர் கடந்து செல்லும் இப்பகுதியில் பல மாதங்களாக இந்த இடிபாடுகளை சரி செய் யாமல் மாநகராட்சி நிர்வாகம் மெத் தனமாக இருப்பதாக சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். திருப்பூர் நகரில் பாரம்பரியம் மிக்க முக்கிய வீதிகளில் ஒன்று அரிசிக்கடை வீதி. இங்கு மளிகை, அரிசி உள்ளிட்ட முக்கிய மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை கள் அதிகளவில் உள்ளன. இத னால் லாரி, வேன்களில் சரக்குகள் கொண்டு வரப்பட்டு ஏற்றி இறக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். இந்நிலையில், சீர்மிகு நகரம் திட்டத்தில் அரிசிக்கடை வீதி காங்கிரீட் சாலையாக மாற்றப் பட்டது. அத்துடன் சாலையோரம் சாக்கடை கால்வாய்கள், நடை பாதை ஆகியவையும் சீர் செய்யப் பட்டு சிமெண்ட் பலகைகள் சாக் கடை கால்வாய்கள் மீது அமைத்து மூடப்பட்டது. ஆனால், அவை அமைத்து குறுகிய காலத்திலேயே சாக்கடை கால்வாய் மூடியுள்ள சிமெண்ட் பலகைகள் உடைந்து நொறுங்கி விட்டன. அவை அப்புறப்படுத்தப் படாமல், புதிய சிமெண்ட் பலகை மூடிகளும் அமைக்கப்படாமல் பல மாதங்களாக அப்படியே உள்ளது.
குறிப்பாக ஒவ்வொரு கடைக் கும் லாரி, வேன்களில் வரக்கூடிய சரக்குகளை பாதையோரம் நிறுத்தி சுமைப்பணித் தொழி லாளர்கள் ஏற்றி, இறக்கிச் செல்லும் பணி செய்வதால், ஒவ்வொரு நடை யிலும் இந்த சாக்கடை கால்வா யைக் கடந்து செல்ல வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது. முதுகில் அதிக பாரத்துடன் கீழே இந்த இடத்தை கவனித்துக் கொண்டு செல்வதும் கடினம். ஆனால், மாநகரின் மையப்பகுதி யில், மாநகராட்சி அலுவலகத் துக்கு அருகாமையில் இருக்கும் இந்த பகுதியிலேயே இந்த மரணக் குழியை மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் காட்டுவ தாகவும், பாதசாரிகள், சுமைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படாமல் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாகவும் சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். பல மாதங்களாக இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் முறை யிட்டும் நடவடிக்கை எடுக்காத தால், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சிஐடியு சுமைப்பணித் தொழி லாளர் சங்கத்தினர் கண்டன தட்டியை அந்த இடத்தில் வைத்துள் ளனர். இனியும் கண்டுகொள் ளாமல் இருந்தால் இதற்காகவே போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தொழிலா ளர்கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.