districts

img

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி மரணம்

பென்னாகரம், ஜூலை 29- பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி மர ணமடைந்த விவகராத்தில் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப்போக்கே காரணம் என குற்றம்சாட்டி ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  பென்னாகரம் ஏரியூர் பகுதியை சேர்ந்த சத்யபிரகாஷ், பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (21) நிறைமாத கர்ப்பிணியான இவர்,  கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுகப்பிரச வத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது அதிகப் படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும் நிலையில் ஏரி யூர், பென்னாகரம், தருமபுரி என மருத்துவமனை மருத்துவம னையாக அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சிகிச்சை தாமதமாகி பரமேஸ்வரி தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பர மேஸ்வரியின் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள், துறை ரீதியாக உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவ ரும் கலைந்து சென்றனர். ஆனால், பரமேஸ்வரி உயிரிழந்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும், எவ்வித நடவடிக்கை எடுக்கா ததை கண்டித்து, இறந்த பெண்ணின் உறவினர்கள் ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறிய லில் ஈடுபட்டனர். மேலும், பேச்சுவார்த்தைக்கு வந்த போலீ சார் மற்றும் மருத்துவ குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் சட்டமன்ற  உறுப்பினர் ஜி.கே.மணியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் சமா தான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விளக்கம் அளித்த பிறகு  மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.